அன்பே புரியவில்லை இன்னும்
ஏன் என்று........
அன்று உன்னை சந்தித்த அந்த நிமிடம் எப்படி
என்னுள் வந்தாய்....
உன்னருகே இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
என்னையல்லவா
இழந்துவிட்டேன்....
நேற்று வரை சரியென்றாய்
ஆனால் இன்று
புரியவில்லையே உன் மனதை....
நினைவுகளே ஒர் சங்கீதம் தான்
எத்தனையோ நினைவுகள் ஒளிராமலே
கருகிப் போய்விட்டன....
காத்திருந்தேன் - நீ வரும் வரை
புரிந்துக்கொண்டேன்
இன்று நீ என்மேல் கொண்ட காதலை
என் கல்லறை முன்னால்
மனம் திறந்து நீ அழுத போது.......







0 comments:
Post a Comment